ஆயிரம் மால்கள் சுழன்றாலும்,
கைலாய ருத்ரம் தாலா!
ஆயிரம் யுகங்கள் ஈசன் முயன்றாலும்,
வைகுண்ட சாகசம் வாரா!
இவ்வியல் புணர்ந்தோர்,
நற்குண ஹரியின் பாதம் பணிந்து
நிர்குண தாண்டவத்தில் வேடமணிந்து
செயலேதும் புரியாமல் பங்கேற்பர்!
அவரே யோகியாய் திகழ்ந்து
நற்குண நிர்குண லீலையில் மகிழ்வர்!
Autistics voices in Climate Action
2 months ago
No comments:
Post a Comment