Thursday, January 23, 2014

இதயத் தாமரை



இதயத் தாமரை மலர்கையில் அமைதியில்
ஆழும் புத்தியும் அஹங்காரமும்

உண்மையான ஆசனம் இதயக் கமலம்
பத்மாசனம் முதலியவை பஹிரங்கம

யோக சஸ்திரம் சாஸ்திரம் சூத்திரம்
இதயக் கமலம் தேடுவதற்காகவே

பிரம்மசூத்திரம் படித்த புத்தியும் பணியும்
சுயஒளி கொண்ட அல்லியின்முன்

இதயக் கமலம் வாசம் வீச
தானே நிற்கும் நாவு

ஆழியில் கலக்கும் மழைத்துளி அதுபோல்
இதயத்திடம் சுயமிழக்கும் சிற்றின்பம்

ஆதவனுடன் எழும் உலகு அதுபோல்
உள்ளொளியுடன் புனித குணங்கள்

இதயத் தாமரை அமர்தல் கல்வி
மற்றவை உணவிடலாம் கற்பிக்காது

No comments: