Saturday, September 18, 2010

வழியொன்று அருளாயோ

உழன்றும் உணராமல் - எங்கும்
சுழலும் மனதை கரைத்து
உண்மை துளியும் அறியாமல் - தமக்கே
பொய்யுறைக்கும் புத்தியைத் திருத்தி,
ஆதவனை பல கோடியாண்டுகளாய் - உழலாமல்
சுழலும் புவியைப் போலவும்,
நன்மை தீமை உண்மை அறிந்தும் - மழலையைப்
போல் சிரிக்கும் ஞானியை போலவும் வாழ,
திக்கின்றி திசையின்றி திரியும் - இவனுக்கு
வழியொன்று அருளாயோ,
சான்றோர் மட்டும் அறியும் - புறச்
சான்றிதழ் ஏதுமில்லாதவனே!

No comments: