Thursday, August 29, 2013

மீண்டும் யோகம்

கற்றது யோகம், தொலைவில் சொர்க்கம்
செய்வது போகம், வாழ்வில் மயக்கம்
பாதையில் மடக்கம், வளர்வது கலக்கம்
ஆதலால் துக்கம், விளைவு ரோகம்

சென்றேன் ரங்கம், கிடைத்தது இரக்கம்
தென்பட்டது அகம், நின்றது தர்க்கம்
குறைந்தது மோகம், கைவசம் ஊக்கம்
உருவானது சங்கம், உருவாகாது வஞ்சகம்

கருநிற மேகம், இனிமையான ஏகாங்கம்
அழகிய இலிங்கம், பார்வை உண்முகம்
வளர்ந்தது ஆக்கம், சாதனம் அத்தியான்மிகம்
செழிக்கும் புங்கம், மீண்டும் யோகம்!

No comments: