Saturday, September 07, 2013

தர்மம் ஞானம் ஐஷ்வர்யம் வைராகியம்

முயன்று சிறுகாலை நாம் விழித்து
கால் தூக்கி தலை கீழே நிறுத்தினால்
தமஸ நீங்கி மனதில் சத்வம் நிறைய
தெளிந்த பார்வை உலகில் செயல்படுமே!
மேற்கொண்டு யோகம் விடாமல் செய்திருந்தால்
ஆழ்ந்த மனம் ஒருநிலை பட்டிருக்க
பூதங்களை கடந்து த்ரிகுணம் உறவாட
தர்மம் ஞானம் ஐஷ்வர்யம் வைராகியம்
நீங்காத பிரக்ருதி அங்கே உருவாகுமே!

No comments: