Sunday, June 03, 2012

சூனியம்

ஒரு வீட்டில் மழலை சிரிக்க
மறு வீட்டில் ஒப்பாரி ஒலிக்க
அதுவென அழைக்கப்பட்ட சிசு
பெயரிட்டு வாழ்த்தப்படுவதும்
அவரென அழைக்கப்பட்ட மனிதனோ
பெயரின்றி பிணமாய் கருதப்படுவதும்
மிக இயல்பாய் இருந்தாலும்
இல்லாததுபோல் இயங்கும் உலகைக்கண்டு
அழுவதா சிரிப்பதா அதனுடன் போராடுவதா, அல்ல
சூனியத்தை உணர்ந்து பேசாமல் அமர்வதா?

No comments: